» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வடிகால் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
செவ்வாய் 22, அக்டோபர் 2024 3:44:55 PM (IST)
தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் மற்றும் குறிஞ்சி நகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், குறிஞ்சி நகர் பிரதான சாலையின் திருப்பத்தில் நடைபெற்று வந்த கல்வெட்டுப் பணிகள் நிறைவடைந்ததால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று முதல் திறந்து விடப்படும் என்று தெரிவித்தார்.