» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெள்ளத் தடுப்பு நடவடிக்கை : ஆட்சியர் ஆய்வு!
செவ்வாய் 22, அக்டோபர் 2024 12:24:08 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில், வெள்ள நீரை செயல்படாத கல்குவாரிகளில் மடைமாற்றம் செய்வது தொடர்பாக ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் கண்மாய் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக உப்பாத்து ஓடையில் வரக்கூடிய வெள்ள நீரை மடைமாற்றம் செய்து செயல்படாத கல்குவாரிகளில் சேமிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் இன்று தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மேலத்தட்டப்பாறை ஊராட்சிப் பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, திருநெல்வேலி திட்ட வடிவமைப்புக் கோட்டம் செயற்பொறியாளர் மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் சுபாஷ், ஸ்ரீராம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.