» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: 3பேர் கைது!

வெள்ளி 11, அக்டோபர் 2024 11:45:53 AM (IST)

தூத்துக்குடியில் டாஸ்மாக் அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி பொன்னகரத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் சிவமுத்து ராஜா (43), இவர் பூபாலராயர் புரத்தில் உள்ள டாஸ்மார்க் கடை முன்பு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த லூர்துசாமி மகன் ஜெர்வின் (25), சாந்தி நகரை சேர்ந்த அருள்தாஸ் மகன் கிங்ஸ்டன் (40), சின்ன கடை தெருவை சேர்ந்த தாமஸ் மகன் பிரவீன் குமார் (35) ஆகிய 3 பேரும் சேர்ந்து அவரிடம் தகராறு செய்தார்களாம்.

மேலும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சிவமுத்து ராஜாவை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து வடபாகம் காவல் நிலையத்தில் சிவமுத்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory