» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கத்தி முனையில் லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு : வாலிபர் கைது!

வெள்ளி 11, அக்டோபர் 2024 11:39:49 AM (IST)

செய்துங்கநல்லூர் அருகே கத்தி முனையில் லாரி டிரைவரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

நெல்லை மாவட்டம், ராதாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஆறுமுகம் (51), லாரி டிரைவர். இவர் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் மெயின் ரோட்டில் தனது லாரியை நிறுத்திவிட்டு டயர்களை சோதனை செய்து கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கத்தியை கட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.8ஆயிரம் பணத்தை பறித்து சென்று விட்டார்களாம்.

இது குறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் ஜான் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, நாங்குநேரியை சேர்ந்த சூர்யா மகன் ஜெயக்குமார் (20) என்பவரை கைது செய்தார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors





Thoothukudi Business Directory