» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் தூக்குபோட்டு தற்கொலை போலீஸ் விசாரணை

வெள்ளி 11, அக்டோபர் 2024 11:34:49 AM (IST)

தூத்துக்குடியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திரவியம் மனைவி வள்ளியம்மாள் (66). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திரவியம் இறந்துவிட்டார். பின்பு வள்ளியம்மாள் தனது உறவினரான ராஜ்குமார் (61) என்பவர் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த மாதம் ராஜ்குமாரின் மகன் ஆள் மாறட்டத்தால் கொலை செய்யப்பட்டாராம். 

இதையடுத்து ராஜ்குமார் தனது குடும்பத்துடன் அத்திமரப்பட்டியில் உள்ள வேறொரு வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வள்ளியம்மாள் தனியாக வசித்துள்ளார். சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தாராம். இதனால் மன வேதனை அடைந்த வள்ளியம்மாள் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரண்டு நாட்களாக அவரது வீட்டுக் கதவு திறக்காதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முத்தையாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வள்ளியம்மாள் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education







New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory