» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர் கைது!

வெள்ளி 11, அக்டோபர் 2024 11:01:16 AM (IST)



தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற  1250 கிலோ ரேஷன் அரிசியை சரக்கு வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 2 மணி அளவில் தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை ரோட்டில் வெள்ளப்பட்டி சோதனை சாவடி முன்பு வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.  அப்போது வேகமாக வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். 

அதில் 25 கிலோ வீதம் 50 மூடைகளில் 1250 கிலோ ரேஷன் இருந்தது. மேலும் இதனை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்த ராமன் மகன் மணிகண்டன் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education



New Shape Tailors



Thoothukudi Business Directory