» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எண்ணெய் வித்து திட்டத்தில் ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு: விவசாயிகள் பயன்பெற அழைப்பு
செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:42:20 PM (IST)
சமையல் எண்ணெய் வித்துக்களுக்கான தேசிய இயக்கம் - எண்ணெய் வித்து பயிர்கள் 24 -25 திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள் மற்றும் சூரியகாந்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும். ஆதார விதை மற்றும் சான்று விதை உற்பத்தி செய்ய ஒரு குவிண்டாலுக்கு ரூ.2500 மானியம், ஆதார விதை மற்றும் சான்றளிக்கப்பட்ட உயர் விளைச்சல் இரக விதை விநியோகத்திற்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.4000 மானியம், சூரியகாந்தி செயல் விளக்கத் திடல் அமைத்திட ஒரு எக்டேருக்கு ரூ.4000 மானியத்தில் இடுபொருட்கள், நிலக்கடலை செயல் விளக்கத் திடல் அமைத்திட ஒரு எக்டேருக்கு ரூ.10000 மானியத்தில் இடுபொருட்கள், ஜிப்சம் விநியோகத்திற்கு ஒரு எக்டேருக்கு ரூ.750 மானியம், உயிர் உரங்கள் ஒரு எக்டருக்கு ரூ.300 மானியம, நிலக்கடலையில் நுண்ணூட்ட உரங்கள் விநியோகத்திற்கு ஒரு எக்டருக்கு ரூ.500 மானியம்,
உயிரியியல் பயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.500 மானியம், நிலக்கடலையில் பயிறு வகை ஊடுபயிர் செய்ய ஒரு எக்டேருக்கு ரூ.1000 மானியம், அறுவடை மற்றும் அறுவடை பின்செய் பணிகளுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.2500 மானியம் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் வயல்களில் தரமான விதை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கிட கூடுதலாக கிலோவிற்கு ரூ.25 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் விதை உற்பத்தியில் ஈடுபட அழைக்கப்படுகிறார்கள்.
முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவர் செயலியில் முன் பதிவு செய்யலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரையின்படி வேளாண்மை திட்டங்கள் தொடர்பான கூகுள் விரிதாளில் பதிவு செய்யலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது கணக்குக்குழு 12ம் தேதி ஆய்வு : ஆட்சியர் தகவல்!
திங்கள் 10, நவம்பர் 2025 8:17:57 AM (IST)

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டாஸ்மாக் ஊழியர் விஷம் கலந்து குடித்து தற்கொலை!
திங்கள் 10, நவம்பர் 2025 8:12:24 AM (IST)

கணவரை பிரிந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திங்கள் 10, நவம்பர் 2025 8:04:41 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த விஏஓ உயிரிழப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 7:59:49 AM (IST)

காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!!
திங்கள் 10, நவம்பர் 2025 7:49:16 AM (IST)

வாலிபரை அரிவாளால் தாக்கி பைக், பணம் பறிப்பு: சிறுவன் உள்பட 3 பேர் கைது
திங்கள் 10, நவம்பர் 2025 7:46:35 AM (IST)








