» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 4, அக்டோபர் 2024 4:50:21 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையம் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

அதில் சுழற்சி முறையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் உள்ள உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரங்களைச் சார்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒரு மூத்த ஆலோசகர்: சட்டம் / சமூகப்பணியில் முதுநிலைப் பட்டம் (ஆளுறு) / சமூகவியலில் முதுநிலை/ உளவியலில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 வருட முன்அனுபவம் ஆற்றுப்படுத்துதலில் (Counselling) இருத்தல் வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். சம்பளம் - ரூ.22000
ஐந்து வழக்குப் பணியாளர்கள்: சட்டம் / சமூகப்பணி / உளவியல் / சமூகவியலில் / சமூகஅறிலியலில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 வருட முன்அனுபவம் இருத்தல் வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி நகராட்சியை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். சம்பளம் - ரூ.18000/-
ஒரு பாதுகாவலர் : அலுவலக அமைப்பில் குறைந்தபட்சம் 1 வருடம் முன்அனுபவம் இருத்தல் வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். சம்பளம் - ரூ.12000/-
இரண்டு பல்நோக்கு உதவியாளர்கள்: 10ம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுமையல் மற்றும் அலுவலகப் பராமரிப்பு பணிகள் செய்ய தெரிந்திருக்க வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி நகராட்சியை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். சம்பளம் - ரூ.10000/-
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 21.10.2024 மாலை 5 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களைக் கீழ்க்காணும் மாவட்ட சமூகநல அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101, தொலைபேசிஎண்: 04612325606 தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளைஞர்கள் சாதி சமுதாய வேறுபாடின்றி பழக வேண்டும் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தல்!
வெள்ளி 16, மே 2025 8:27:34 AM (IST)

ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி தூத்துக்குடி நபர் படுகொலை : 7 பயணிகளிடம் விசாரணை!
வெள்ளி 16, மே 2025 8:19:30 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 வீரா்கள் தோ்வு
வெள்ளி 16, மே 2025 8:09:32 AM (IST)

கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் நிறைவு விழா : அமைச்சர் கீதாஜீவன் சான்றிதழ்கள் வழங்கினார்
வியாழன் 15, மே 2025 7:54:13 PM (IST)

தூத்துக்குடியில் மாடு வளர்ப்பிற்கு பயனாளிகள் தேர்வு!
வியாழன் 15, மே 2025 5:20:52 PM (IST)

அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அழைப்பு!
வியாழன் 15, மே 2025 4:52:09 PM (IST)

RamalakshmiOct 5, 2024 - 04:30:16 PM | Posted IP 162.1*****