» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் புகைப்பட பயிற்சி பட்டறை

வெள்ளி 4, அக்டோபர் 2024 3:31:00 PM (IST)

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான  புகைப்பட பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கு பகுதியிலுள்ள திடலில் 5ஆவது புத்தகத் திருவிழா, அக்.3-13 வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. அதே திடலில், 3ஆவது நெய்தல் கலைத் திருவிழா வரும் அக்.11-13 வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் அக்டோபர் 5, 6 (சனி, ஞாயிறு) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான அடிப்படை புகைப்பட பயிற்சி பட்டறை கோவில்பட்டி CEDAR சார்பில் நடைபெற உள்ளது. 

மேலும், அக்டோபர் 7 ஆவண மற்றும் பயண புகைப்பட கலை குறித்து ஜோசப் கேஸ்கரினோ, அக்டோபர் 8 சதுப்பு நில பறவைகள் புகைப்பட கலை குறித்து சக்தி மாணிக்கம், அக்டோபர் 9 வீடியோகிராஃபி குறித்து வருண்,  ட்ரோன் புகைப்பட கலை மற்றும் வீடியோகிராஃபி குறித்து அரவிந்த் ஆகியோர் பயிற்சி அளிக்கிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory