» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: 23ஆம் தேதி கயத்தார் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு!

செவ்வாய் 1, அக்டோபர் 2024 8:23:03 PM (IST)

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வருகிற 23ஆம் தேதி கயத்தார் வட்டத்தில் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளார்.

தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் கயத்தார் வட்டத்தில் 23.10.2024 அன்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளார்.

இத்திட்ட நடைமுறைகளின்படி பொதுமக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் 04.10.2024 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை கயத்தார் குறுவட்டத்தில் கயத்தார் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் கட்டிடத்திலும், காமநாயக்கன்பட்டி குறுவட்டத்தில், காமநாயக்கன்பட்டி குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்திலும், கடம்பூர் குறுவட்டத்தில் கடம்பூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், செட்டிகுறிச்சி குறுவட்டத்தில் பொன்னுசாமி திருமண மண்டபத்திலும் பெற உள்ளனர். 

எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பலனடையலாம். என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!

திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory