» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆசிரியை வீட்டில் 7பவுன் நகை திருட்டு: பணிப்பெண் உட்பட 2 பேர் கைது!

செவ்வாய் 1, அக்டோபர் 2024 4:09:22 PM (IST)

தூத்துக்குடியில் தலைமை ஆசிரியை வீட்டில் 7 பவுன் தங்க நகையை திருடிய பணிப்பெண் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி சக்தி விநாயகர் புரம் 7வது தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் மனைவி அலமேலு (54), இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியை ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் தூத்துக்குடி நந்தகோபால புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி மாரியம்மாள் (46) என்பவர் பணிப்பெண் ஆக வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி அலமேலு வீட்டில் பீரோவில் இருந்த 7 பவுன் தங்கச் செயின் திருடு போய்விட்டது. இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் அலமேலு  அளித்த புகாரின் போலீசார் விசாரணை நடத்தியதில், பணிப்பெண் மாரியம்மாள் மற்றும் அவரது தம்பி, சங்கரநாராயணன் மகன் இசக்கிமுத்து (43) என்பவருடன் சேர்ந்து நகையை திருடியது தெரியவந்தது. 

இதயடுத்து போலீசார் அக்காள், தம்பி இருவரையும் கைது செய்து 7 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital






New Shape Tailors


CSC Computer Education



Thoothukudi Business Directory