» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாம்சங் நிறுவனத்தை கண்டித்து மறியல் போராட்டம் : சிஐடியு தொழிற்சங்கத்தினர் கைது!

செவ்வாய் 1, அக்டோபர் 2024 3:57:17 PM (IST)



தூத்துக்குடியில் சாம்சங் நிறுவனத்தை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 103பேரை போலீசார் கைது செய்தனர்.  

தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க சட்டங்களுக்கு விரோதமாக செயல்படும் சாம்சங் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இந்திய அரசியல் சாசனப்படி சங்கம் அமைக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விண்ணப்பித்து 90 நாட்களுக்கு மேலாகியும் இனியும் இழுத்தடிக்காமல் தமிழக அரசு உடனடியாக சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வவலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் முன்பாக சிஐடியு வை சேர்ந்த தொழிலாளிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட தலைவர் இரா பேச்சிமுத்து தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் ஆர்.ரசல் மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார். இந்த போராட்டத்தில் மாநில குழு உறுப்பினரும் தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ஆர் கிருஷ்ணவேணி, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரா, மாவட்ட தலைவர் ஜெபராணி, கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் காசி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டதில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 103பேரை போலீசார் கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





CSC Computer Education



Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory