» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகன் பள்ளி செல்லாததால் தாய் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்

செவ்வாய் 1, அக்டோபர் 2024 3:35:31 PM (IST)

தூத்துக்குடியில் மகன் பள்ளிக்கு செல்லாததால் மன வேதனை அடைந்த தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி தாளமுத்து நகர், முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் இவரது முருகேஸ்வரி (36). இந்த தம்பதியரின் 13 வயது மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறான். ஒழுங்காக பள்ளிக்கு செல்லமாட்டாராம். மேலும் வீட்டில் சேட்டை செய்வாராம். 

இதனால் முருகேஸ்வரி மகனை கண்டித்துள்ளார். ஆனாலும் மகன் திருந்தவில்லையாம். இதனால் மன வேதனை அடைந்த அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory