» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி பிரிந்து சென்றதால் கொத்தனார் தூக்குபோட்டு தற்கொலை!
சனி 21, செப்டம்பர் 2024 11:35:36 AM (IST)
தூத்துக்குடி அருகே மனைவி பிரிந்து சென்றதால் கொத்தனார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி, சிலுவைபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் மகன் சதீஷ்குமார் (25). கொத்தனார் வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சனையில் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.