» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்திற்கு ஓஎல்எஸ் டிரஸ்ட் நிதி ஒப்படைப்பு .

சனி 21, செப்டம்பர் 2024 3:22:24 PM (IST)



தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்திற்கு ஓஎல்எஸ் டிரஸ்ட் நிதியை, தொழிலதிபர் ஜோ வில்லவராயர் குடும்பத்தினர் ஒப்படைத்தனர். 

தூத்துக்குடியில் மறைந்த ஜோ வில்லவராயரின் மூத்த புதல்வர் ஜேசையா வில்லவராயர், பனிமய மாதா ஆலய அதிபர் ஸ்டார்வினை பங்கு அலுவலகத்தில் சந்தித்து தன் தந்தையார் பொறுப்பில் உள்ள ஓஎல்எஸ் டிரஸ்ட் ரூ.33,50000 வங்கி ஆணங்களை பங்கு பேரவை செயலர்  எட்வின் பாண்டியன், முன்னாள் பங்கு பேரவை துணை தலைவர் ஹார்ட்லி, வின்சென்ட் டே பால் சபை தலைவர், ஜூட் ரன், பங்கு மூத்த உறுப்பினர் வால்டர் முன்நிலையில் பங்கு பேரவைக்கு வழங்கினார். 

பங்குதந்தை ஸ்டர்வின் அடிகளார் நன்றி சொல்லி ஜெபம் செய்து பண காசோலையை  ஒப்பு கொண்டார். பங்கு பேரவை சார்பில் இந்த பெரும் தொகையை, மறைந்த ஜோ வில்லவராயர் பத்திரமாக பாதுகாத்து இன்று அவர் குடும்பம் அதை உரிய முறையில் ஒப்படைத்தமைக்கு பங்கு பேரவை செயலர் மற்றும் உறுப்பினர்கள் வில்லவராயர் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory