» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

சனி 21, செப்டம்பர் 2024 3:33:49 PM (IST)



பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், தூய்மையே சேவை 2024 பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மையமாகக் கொண்ட 22 ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (21.09.2024) நடைபெற்றது. 

முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பேரிலோவன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி பெத்தனாட்சி பாலமுருகன் முன்னிலை வகித்தார். முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள், மருத்துவர்கள்  பணியாளர்கள், தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆயுஷ் மருத்துவ அலுவலர் ஜாண் மோசஸ் முகாமில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஆயுர்வேதா கஷாயம் வழங்கினார் மேலும் ஆயுர்வேத சிகிச்சை முறையும் விளக்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory