» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நகை கடை ஊழியர் திடீர் மாயம்.: போலீசார் விசாரணை
வெள்ளி 13, செப்டம்பர் 2024 10:08:21 AM (IST)
சாத்தான்குளத்தில் நகை கடை ஊழியர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் இட்டமொழி சாலையைச் சேர்ந்தவர் ப. மணிகண்டராஜா (44). இவருக்கு ராதா என்ற மனைவியும், மற்றும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் பேய்க்குளத்தில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாள்களாக உடல் நல குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 10ஆம்தேதி மாலை 5 மணிக்கு செல்போனை வீட்டில் வைத்து விட்டு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். அதன்பின் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ராதா (38) சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காடல்குடி காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு!
வியாழன் 13, நவம்பர் 2025 9:09:28 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை கைது செய்ய எதிர்ப்பு: போலீசார் - வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:21:43 PM (IST)

மாப்பிள்ளையூரணியில் ஆயுர்வேத மருத்துவ முகாம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:10:20 PM (IST)

தசரா திருவிழா, கந்தசஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு எஸ்பி பாராட்டு!
வியாழன் 13, நவம்பர் 2025 8:04:12 PM (IST)

ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை அறிமுக விழா!
வியாழன் 13, நவம்பர் 2025 5:51:24 PM (IST)

நவ.15ல் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல ஊழியர் பிரதிநிதிகள் தேர்தல்: வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம்!!
வியாழன் 13, நவம்பர் 2025 5:47:23 PM (IST)








