» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

த.வெள்ளையன் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி: வணிகர் சங்கம் கோரிக்கை!

புதன் 11, செப்டம்பர் 2024 5:18:39 PM (IST)

வணிகர் சங்கங்களின் பேரவை த.வெள்ளையன் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி மாவட்ட தலைவர் பா.விநாயக மூர்த்தி தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிறுவனர் மற்றும் தலைவர், த. வெள்ளையன் மறைவானது தமிழ்நாட்டின் அணைத்து வணிகர்களையும் ஆழாத்துயரில் ஆழ்த்தி உள்ளது. 

அவர் வியாபாரிகளுக்காக மட்டுமல்லாமல், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்காக பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். தூத்துக்குடி மக்களுக்கான ஸ்டெர்லைட் போராட்டத்தை முன்னெடுத்த மூத்த தலைவர். அவரது தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி அரசின் சார்பில் செப்.12 தூத்துக்குடி மாவட்டம், பிச்சுவிளையில் நடைபெறும் இறுதிச் சடங்கில், அண்ணாருக்கு அரசு மரியாதை செலுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விஸ்வபிரம்மா ஜெயந்தி விழா

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 5:31:30 PM (IST)

கார் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிர் தப்பினர்

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 5:22:39 PM (IST)

மதுக்கடை திறப்பு : கிராம மக்கள் எதிர்ப்பு!

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 4:41:41 PM (IST)

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory