» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம்: தலைமைக் கழகம் அறிவிப்பு

செவ்வாய் 30, ஜூலை 2024 12:45:09 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி 53வது வார்டு கவுன்சிலர் திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடி மாநகர விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் எஸ்.வி.எஸ் முத்துவேல் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எஸ்விஎஸ் முத்துவேல் தூத்துக்குடி மாநகராட்சியில் 53வது வார்டு கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

53வது வார்டு நண்பன்Jul 30, 2024 - 03:23:08 PM | Posted IP 172.7*****

இவர் அப்படி என்ன தவறு செய்தார் யாரையும் கையை பிடிச்சு இழுத்தாரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education

New Shape Tailors






Thoothukudi Business Directory