» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நூறு நாட்களைக் கடந்தும் வடியாத வெள்ளம் : விவசாயிகள் வேதனை
திங்கள் 1, ஏப்ரல் 2024 8:12:34 AM (IST)

உடன்குடி அருகே வட்டன்விளையில் 100 நாட்களைக் கடந்தும் வட்டன்விளையில் விளைநிலங்களில் வடியாத வெள்ளத்தால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சடையநேரி குளம் நிரம்பி, கரை உடைந்ததால், வட்டன்விளை, வெள்ளாளன்விளை, செட்டிவிளை, மாணிக்கபுரம், லட்சுமிபுரம், மருதூர்கரை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளையும் வெள்ளம் மூழ்கடித்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
வெள்ளாளன்விளையில் மாதக்கணக்கில் வீடுகளுக்குள் தேங்கிய வெள்ளம் மெல்ல வடிந்தது. எனினும் வட்டன்விளை, வெள்ளாளன்விளை உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்களில் தேங்கிய வெள்ளம் 100 நாட்களைக் கடந்தும் இன்னும் வடியவில்லை. இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின. முருங்கை, தென்னை உள்ளிட்ட மரங்கள் அழுகும் நிலையில் உள்ளன. விவசாயிகளும் விவசாய பணிகளுக்கு செல்ல முடியவில்லை.
கோடைக்காலத்தில் பதனீர் சீசன் தொடங்கிய நிலையில், விளைநிலங்களில் வெள்ளம் வடியாததால் பனைத் தொழிலாளர்களும் பனையேற முடியவில்லை. இதனால் கருப்பட்டி, பனங்கற்கண்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வட்டன்விளையைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையிலும், விளைநிலங்களில் தேங்கிய வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ளது. நீண்ட நாட்களாக தேங்கிய தண்ணீரால் தரையில் சேறும் சகதியுமாக உள்ளது. தண்ணீர் சூழ்ந்த தோட்டங்களுக்கு செல்லவும் அச்சமாக உள்ளது.
எனவே வட்டன்விளை, வெள்ளாளன்விளை, செட்டிவிளை உள்ளிட்ட பகுதிகளில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து, தண்ணீரை வடிய வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இங்கு புதிய குளங்களையும் உருவாக்க வேண்டும்’’ என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி!!
வெள்ளி 23, மே 2025 5:00:18 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழ்வாய்வு: ட்ரோன் மூலமாக அளவீடு பணிகள் தொடங்கியது!
வெள்ளி 23, மே 2025 4:51:56 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு தலா ரூ50 ஆயிரம் நிதி : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்.
வெள்ளி 23, மே 2025 4:22:20 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 23, மே 2025 4:06:13 PM (IST)

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வெள்ளி 23, மே 2025 4:02:59 PM (IST)

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சேவை
வெள்ளி 23, மே 2025 3:47:36 PM (IST)

Manivannan.Apr 1, 2024 - 10:43:28 AM | Posted IP 172.7*****