» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோயிலில் தீர்த்தவாரி: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

செவ்வாய் 21, நவம்பர் 2023 7:57:11 PM (IST)



தூத்துக்குடி சிவன் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று தீர்த்தவாரி நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயில் என்று அழைக்கப்படும் சிவன் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18ம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிலையிைல், கந்த சஷ்டி திருவிழா  9ஆம் திருநாளான இன்று இரவு அருள்மிகு  சுப்ரமணியர்  தீர்த்தவாரி  வீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital







Thoothukudi Business Directory