» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேன் மீது மோட்டார் பைக் மோதல்: வாலிபர் பலி
சனி 27, மே 2023 8:29:25 AM (IST)
நாசரேத் அருகே வேன் மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள வடலிவிளை மேலத்தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகன் குமரன் (22). இவர் கேரளாவில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக வந்திருந்தார்.
கடந்த 24-ந் தேதி இரவு வனத்திருப்பதி - இடையன்விளை பகுதியில் பைக்கில் சென்றபோது சாலை ஓரம் நிறுத்தி வைத்திருந்த வேன் மீது மோதி பைக் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த குமரன் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி
சனி 3, ஜூன் 2023 3:47:18 PM (IST)

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!
சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)
