» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தீக்காயம் அடைந்த இளம்பெண் மரணம் : போலீஸ் விசாரணை

வியாழன் 23, மார்ச் 2023 10:36:32 AM (IST)

தூத்துக்குடியில் கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பற்றி பலத்த தீக்காயம் அடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் வசிப்பவர் சந்திரன். இவரது மகள் முத்து பிரியதர்ஷினி (21), கடந்த 27ஆம் தேதி தனது வீட்டில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தபோது, கற்பூரம் இவர் மீது விழுந்ததில் இவரது ஆடையில் தீப்பற்றியது. 

இதில் பலத்த தீக்காயம் அடைந்த பிரியதர்ஷினி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory