» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து அசத்திய மாணவர்கள்

திங்கள் 26, ஆகஸ்ட் 2024 12:37:09 PM (IST)



கோவில்பட்டி செக்கடி தெருவில் உள்ள சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளியில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பள்ளி மாணவர்கள் கிருஷ்ணர்,ராதை வேடம் அணிந்து வருகை தந்து அசத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலர் கண்ணன் தலைமை வகித்தார். பள்ளிக்குழு உறுப்பினர் மணிக்கொடி,நாடார் நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரா கிட்ஸ் பள்ளி முதல்வர் மீனா அனைவரையும் வரவேற்றார்.

பள்ளியில் கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் நாடார் நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் செல்வி.சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், உட்பட  பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory