» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கான மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் ஓட்டப் பள்ளியில் இருந்து புறப்பட்டு பிரகாசபுரம், மூக்குப்பீறி மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
இதில் நாசரேத் காவல் நிலைய தலைமை காவலர்கள் வேல்பாண்டியன், நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் வழக்கறிஞர் பிரபாகர், தலைமை ஆசிரியர் கென்னடி, உடற்கல்வி ஆசிரியர்கள் பிரைட்டன் ஜோயல், ஜாஸ்மின் ஏஞ்சல் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)

கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
புதன் 15, அக்டோபர் 2025 5:15:51 PM (IST)


