» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்!

திங்கள் 29, ஜூலை 2024 9:56:32 AM (IST)



பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத் தின் கீழ், நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப்பள்ளியில் கண் பரிசோத னை முகாம் நடைபெற்றது. 

தலைமை ஆசிரியர் குணசீலராஜ் முகாமை துவக்கி வைத்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம்  ஜெபராஜ் வரவேற்றார். தூத்துக் குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற் செல்வன் வழிகாட்டுதலின்படி, கண் மருத்துவ உதவியாளர் முத்துலட்சுமி, விழி ஒளி பரிசோ தகர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு கண் பரிசோத னைகள் செய்தனர். தூரப்பார்வை,  கிட்டப்பார்வை மற்றும் கண்களில் இருக்கக்கூடிய பல்வேறு குறைபா டுகள் குறித்தும் மாணவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டது. 

கண் குறைபாடு உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு, தமிழக அரசின் விலையில்லா கண் கண்ணாடிகள் பெறுவதற்கு பரிந் துரை செய்யப்பட்டது.  நிகழ்ச்சி யில், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால் மற்றும் என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். பரிசோதனை முகாமிற்கான ஏற்பா டுகளை  தாளாளர் சுதாகர், பொறுப் பாசிரியர் கிறிஸ்டோபர் லிவிங்ஸ் டன்,ஒவியக்கலைஆசிரியர் அலெக் சன்கிறிஸ்டோபர்,பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory