» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் சதுரங்கப் போட்டி!
செவ்வாய் 23, ஜூலை 2024 8:34:26 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச செஸ் தினத்தை முன்னிட்டு சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி உலக அளவில் சர்வதேச செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 11 வயது, 14 வயது, மற்றும் 17 வயது பிரிவினருக்கான சதுரங்க போட்டிகள் பள்ளி கலையரங்கத்தின் உட்பகுதியில் வைத்து நடைபெற்றன. பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் 102 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அடுத்த மாதம் நடைபெற இருக்கின்ற மண்டல அளவிலான போட்டிகளில் பங்கு பெற இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வ சுந்தர் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.போட்டிகளில் கலந்து கொண்ட சதுரங்க வீரர்களையும், ஏற்பாடுகளை செய்த ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் சுதாகர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

JeswinImmanuelJul 24, 2024 - 10:25:41 PM | Posted IP 162.1*****