» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

எட்டையாபுரம் பள்ளியில் கை கழுவும் முறை செயல் விளக்கப்பயிற்சி

சனி 13, ஜூலை 2024 3:14:06 PM (IST)



எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் கை கழுவும் முறை குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லால்பகதூர் கென்னடி தலைமை வகித்தார். ஆசிரியை அன்புத்தாய் அனைவரையும் வரவேற்றார். சுகாதார பயிற்சியாளர் முத்துமுருகன் கலந்து கொண்டு சோப்பு போட்டு கை கழுவும் முறை குறித்தும் சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்தும் செயல்விளக்கப்பயிற்சி அளித்தார். 

சுகாதாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவர்களுக்கு சோப்பு பரிசாக வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் ஜோசப் ஆசீர், எப்சி,ஜானகி, பிரியா, உள்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ஜான்சி ராணி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory