» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பிரகாசபுரம் பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா
ஞாயிறு 14, ஏப்ரல் 2024 8:47:44 AM (IST)

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் டிஎன்டிடிஏ துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் ராஜபுஷ்பம் செல்வராஜ், ஓய்வு பெறுவதையொட்டி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
சேகரத்தலைவர் நவராஜ் தலைமை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியை பிரீடா நவராஜ் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கர், தலைமை ஆசிரியர்கள் தர்மசீலிசாந்தி, விஜிலா காருண்யா, மோட்சம் அருள்சீலி ஆகியோர் வாழ்த்திப்பேசினர். மாணவ_ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இதையடுத்து பணி நிறைவு பெறும் ஆசிரியை ராஜபுஷ்பத்திற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெபராஜ் தொகுத்து வழங்கினார். ஆசிரியை ராஜபுஷ்பம் ஏற்புரை வழங்கினார். இதில் சபை ஊழியர் ஸ்டான்லி மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர். ஷர்லின் ஸ்வாட்ஸ் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST)

கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)

செவித்திறன் குறைந்தோர்க்கான பள்ளியில் குடியரசு தினவிழா
திங்கள் 27, ஜனவரி 2025 10:22:16 AM (IST)
