» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் ஆசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா

சனி 29, ஏப்ரல் 2023 3:30:49 PM (IST)



கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி ஆசிரியை ராஜேஸ்வரி 36 ஆண்டுகள் பணி செய்து பணி நிறைவு பெற்றமையை முன்னிட்டு பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு நாடார் உறவின்முறைச் சங்க செயலர் ஜெயபாலன் தலைமை வகித்தார், நாடார் உறவின்முறைச் சங்க பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் திருக்கோயில் தர்மகர்த்தா மாரியப்பன், பள்ளிச் செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார். 

பள்ளி ஆசிரியைகள் ஜெய ஜீவா, தனலட்சுமி, அருணா, ஜெப அகிலா,சங்கரா கிட்ஸ் வித்யாலயா முதல்வர் மீனா, பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சண்முகக்கனி, எபனேசர் ஜெயா ஆகியோர் பணி நிறைவுபெற்ற ஆசிரியையின் பணிகளை பாராட்டிவாழ்த்தி பேசினர். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் சார்பாக பணி நிறைவு பெற்ற ஆசிரியை ராஜேஸ்வரிக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பணி நிறைவுபெற்ற ஆசிரியை ராஜேஸ்வரி ஏற்புரை வழங்கினார். விழாவில் பள்ளிக் குழு உறுப்பினர் ராஜா அமரேந்திரன், பள்ளியின் முன்னாள். ஆசிரியர்கள் முத்தையா, முத்துலெட்சுமி, தங்க பேச்சியம்மாள், உட்பட பலர் கலந்து கொண்டனர் ஆசிரியை சகாய கலாவதி நன்றி கூறினார். நிகழ்ச்சியினை ஆசிரியர் அருள் காந்தராஜ் தொகுத்து வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory