» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் ஆசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா
சனி 29, ஏப்ரல் 2023 3:30:49 PM (IST)

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி ஆசிரியை ராஜேஸ்வரி 36 ஆண்டுகள் பணி செய்து பணி நிறைவு பெற்றமையை முன்னிட்டு பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு நாடார் உறவின்முறைச் சங்க செயலர் ஜெயபாலன் தலைமை வகித்தார், நாடார் உறவின்முறைச் சங்க பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் திருக்கோயில் தர்மகர்த்தா மாரியப்பன், பள்ளிச் செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி ஆசிரியைகள் ஜெய ஜீவா, தனலட்சுமி, அருணா, ஜெப அகிலா,சங்கரா கிட்ஸ் வித்யாலயா முதல்வர் மீனா, பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சண்முகக்கனி, எபனேசர் ஜெயா ஆகியோர் பணி நிறைவுபெற்ற ஆசிரியையின் பணிகளை பாராட்டிவாழ்த்தி பேசினர். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் சார்பாக பணி நிறைவு பெற்ற ஆசிரியை ராஜேஸ்வரிக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பணி நிறைவுபெற்ற ஆசிரியை ராஜேஸ்வரி ஏற்புரை வழங்கினார். விழாவில் பள்ளிக் குழு உறுப்பினர் ராஜா அமரேந்திரன், பள்ளியின் முன்னாள். ஆசிரியர்கள் முத்தையா, முத்துலெட்சுமி, தங்க பேச்சியம்மாள், உட்பட பலர் கலந்து கொண்டனர் ஆசிரியை சகாய கலாவதி நன்றி கூறினார். நிகழ்ச்சியினை ஆசிரியர் அருள் காந்தராஜ் தொகுத்து வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா: கனிமொழி வழங்கினார்!
சனி 27, மே 2023 10:26:32 AM (IST)

தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
வெள்ளி 26, மே 2023 11:40:15 AM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா
திங்கள் 22, மே 2023 11:59:38 AM (IST)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.5 சதவீதம் தேர்ச்சி!
சனி 20, மே 2023 10:58:32 AM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் செவிலியர் தினவிழா
திங்கள் 15, மே 2023 3:46:49 PM (IST)

பிளஸ் டூ தேர்வில் நாசரேத் சாலமோன் பள்ளி சாதனை
புதன் 10, மே 2023 7:36:33 PM (IST)
