» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பள்ளியில கோடைகால கால்பந்து இலவச பயிற்சி முகாம் ஏப். 29 ஆம் தேதி துவங்குகிறது.
செவ்வாய் 25, ஏப்ரல் 2023 7:48:59 PM (IST)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கோடை கால இலவச காலபந்து பயிற்சி முகாம் ஏப்.29 ஆம் தேதி தொடங்கி மே 12 ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெ றுகிறது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மர்கா ஷிஸ் ரெக்கிரியேசன் கிளப் மற்றும் வெஸ்ட்எண்ட் கிளப் ஆகியவை இணைந்து 6 முதல் 11ஆம் வகுப்பு,பள்ளி மாணவர்களுக்கான கோ டைகால கால்பந்து இலவச பயிற்சி முகாம் ஏப். 29 ஆம் தேதி தொடங்குகிறது. இம் முகாமானது ஞாயிற்றுக்கி ழமை தவிர மே 12ஆம் தேதி வரை 12 நாட்கள் நடத்தப்ப டுகிறது. பயிற்சியாளர்கள் மர்காஷிஸ் கல்லூரி உடற் கல்வி இயக்குனர் ரோக்லா ண்ட் மற்றும் சென்னை யைச் சார்ந்த முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்
பள்ளி மைதானத்தில் காலை, மாலை என இரு வேளை இப்பயிற்சி அளிக் கப்படுகிறது.பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களு க்கு காலை ,மாலை சிற்று ண்டிகள் இலவசமாக வழங் கப்பட உள்ளது.முகாம் ஏற் பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம்குமார், பள்ளி தாளாளர் சுதாகர் மற்றும் மர்காஷிஸ் கால் பந்து கழக நிர்வாகி கள் வெஸ்டர்ன் குரூப்ஸ் மற்றும் பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர்கள் செய்து வருகின்றனர் . பயிற்சி சேர விரும்பும் மாணவர்கள் 9443496468, 9600283024 ஆகிய செல்லிடபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.