» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா
செவ்வாய் 25, ஏப்ரல் 2023 8:27:17 AM (IST)
பனையூர் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் ஊராட்சி பனையூர் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் அ. லதா, ஞா. ஜெயஸ்ரீ, சி. ஏஞ்சல் இ. மாரிச்செல்வி மு. பேச்சியம்மாள் ஆகியோருக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தலைமை வகித்தவர்பள்ளிச் செயலாளர் ரா. ஆதி மாரீஸ்வரன், வரவேற்புரை தலைமை ஆசிரியர் மரிய அனிதா, முன்னிலை வகித்தவர் கிராமத் தலைவர் பாண்டி, மற்றும் மாரிச்செல்வம், சிறப்புரை கவிதா, நிர்வாகிகள் அ. பாலமுருகன், செல்வகுமார், உட்பட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கிராம பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.