» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கெச்சிலாபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் : மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
செவ்வாய் 25, ஏப்ரல் 2023 8:18:22 AM (IST)
கெச்சிலாபுரம் இந்து நாடார் ஆரம்ப பள்ளியில் புதியவகுப்பறை கட்டிடங்கள், மற்றும் பூங்காவினை மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கெச்சிலாபுரம் கிராமத்தில் இந்து நாடார் உறவின்முறை மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக கட்டப்பட்டுள்ள இந்து நாடார் ஆரம்ப பள்ளி புதிய 5-வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சிறுவர் பூங்காவினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி செல்வப்பாண்டி, பள்ளி தலைமை ஆசிரியை பாண்டியம்மாள், தலைவர் மாரியப்ப நாடார், முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, சூரங்குடி கூட்டுறவு சங்க செயலர் ராமச்சந்திரன், கிழக்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கரண்குமார், சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.