» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

செய்துங்கநல்லூர் குழந்தை ஏசு நர்சரி பள்ளி ஆண்டு விழா

வெள்ளி 31, மார்ச் 2023 3:14:08 PM (IST)



செய்துங்கநல்லூரில் குழந்தை ஏசு நர்சரி பள்ளியின் 44வது ஆண்டு விழா  நடந்தது. 

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் உள்ள குழந்தை ஏசு நர்சரி பள்ளியின் 44வது ஆண்டு விழா  புனித லூசியா நடுநிலைப்பள்ளி கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு  செய்துங்கநல்லூர் பங்குதந்தை ஜக்சன் அருள் தலைமை வகித்தார். பள்ளி  தாளாளர் அருட்சகோதரி ஜெபமாலை மேரி முன்னிலை வகித்தார். 

சிறப்பு விருந்தினராக  செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கருத்தையா, ராதாகிருஷ்ணன் ஆகியோர்  கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார்.  உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துகுமார் சிறப்புரையாற்றினார்.  கலை நிகழ்ச்சிகள் நடந்தது.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை நர்சரி பள்ளி முதல்வர் அருட்சகோதரி லிபியா தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory