» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூர் குழந்தை ஏசு நர்சரி பள்ளி ஆண்டு விழா
வெள்ளி 31, மார்ச் 2023 3:14:08 PM (IST)

செய்துங்கநல்லூரில் குழந்தை ஏசு நர்சரி பள்ளியின் 44வது ஆண்டு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் உள்ள குழந்தை ஏசு நர்சரி பள்ளியின் 44வது ஆண்டு விழா புனித லூசியா நடுநிலைப்பள்ளி கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு செய்துங்கநல்லூர் பங்குதந்தை ஜக்சன் அருள் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் அருட்சகோதரி ஜெபமாலை மேரி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கருத்தையா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துகுமார் சிறப்புரையாற்றினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நர்சரி பள்ளி முதல்வர் அருட்சகோதரி லிபியா தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


