» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூர் குழந்தை ஏசு நர்சரி பள்ளி ஆண்டு விழா
வெள்ளி 31, மார்ச் 2023 3:14:08 PM (IST)
செய்துங்கநல்லூரில் குழந்தை ஏசு நர்சரி பள்ளியின் 44வது ஆண்டு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் உள்ள குழந்தை ஏசு நர்சரி பள்ளியின் 44வது ஆண்டு விழா புனித லூசியா நடுநிலைப்பள்ளி கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு செய்துங்கநல்லூர் பங்குதந்தை ஜக்சன் அருள் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் அருட்சகோதரி ஜெபமாலை மேரி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கருத்தையா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துகுமார் சிறப்புரையாற்றினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நர்சரி பள்ளி முதல்வர் அருட்சகோதரி லிபியா தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனர்.