» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அங்கமங்கலத்தில் பள்ளி கூடுதல் கட்டிடம் கட்ட இடம் தேர்வு: மோகன் சி லாசரஸ் ஆய்வு
வெள்ளி 10, மார்ச் 2023 10:56:18 AM (IST)
அங்கமங்கலம் முஸ்லிம் தெருவில் புதிதாக கட்டப்பட உள்ள பள்ளி கூடுதல் கட்டிடத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
குரும்பூர் முஸ்லிம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து இயேசு விடுக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டம் மற்றும் இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் சார்பில் பள்ளிக்கு கூடுதல் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மோகன் சி லாசரஸ் பார்வையிட்டார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் சந்திரகாந்தம் வரவேற்றார்.
இதில் ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர், அங்கமங்கலம் பஞ். தலைவர் பானுப்பிரியா பாலமுருகன், ஜமாத் நிர்வாகிகள் நசீர், பாதுஷா, ஷேக் பைஜூ, அப்பாஸ் மற்றும் குரும்பூர் வெல்பர் டிரஸ்ட் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அங்கமங்கலம் முஸ்லிம் தெருவில் கட்டப்பட உள்ள பள்ளி கூடுதல் கட்டிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை மோகன் சி லாசரஸ் பார்வையிட்டு மாணவ மாணவிகளிடம் உரையாடினார்.