» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
காயல்பட்டினம் பாத்திமா பள்ளியில் விளையாட்டு விழா
வெள்ளி 3, மார்ச் 2023 3:25:45 PM (IST)
காயல்பட்டினம் பாத்திமா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் விளையாட்டு விழா 2நாட்கள் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பாத்திமா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் விளையாட்டு விழா 2நாட்கள் நடந்தது. முதல் நாள் போட்டியை பள்ளி நிர்வாகி அஷரப் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாணவ- மாணவிகளுக்கு மாறுவேடப் போட்டி நடந்தது. காயல்பட்டினம் அல்-அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி தாளாளர் புஹாரி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள் உமாமகேஷ்வரி, உஷாகாந்திமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
2வது நாள் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. ஆறுமுகநேரி- இராஜமன்யபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலையரசி சித்ரா தலைமை வகித்தார். பள்ளி ஆலோசகர் எமிடெய்சி கிறிஸ்டி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கிப்ட்லின் வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி அஷரப் தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனர்.