» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மண்டல அளவிலான தடகள போட்டி : நாசரேத் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் சாதனை

வெள்ளி 3, மார்ச் 2023 3:19:50 PM (IST)



மண்டல அளவிலான தடகளப்போட்டியில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளனர் 

அண்ணா பல்கலைகழகம் சார்பில் மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டுப் போட்டிகள் மெப்கோ பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் 18 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியை சார்ந்த இறுதியாண்டு கணினிதுறை மாணவன் கோகுல் (1500 மீட்டர் ஓட்டத்தில்) 3வது இடத்தையும், 

இரண்டாமாண்டு கணினி துறை மாணவி விவேகா 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டத்தில் முதல் இடத்தையும், இறுதியாண்டு மின்னணு துறை மாணவி சங்கவி மும்முறை தாண்டுதல் போட்டியில் முதல் இடத்தையும், தகவல் தொழில் நுட்பத் துறை இரண்டாம் ஆண்டு மாணவி குணசுந்தரி மும்முறை தாண்டுதல் போட்டியில் 2வது இடத்தையும், இறுதியாண்டு கணினிதுறை மாணவி சிநேகா – 400 மீட்டர் ஓட்டத்தில் 2வது இடத்தையும், 

மின்னணுதுறை இறுதியாண்டு; மாணவி சுதா – 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் ;மூன்றாம் ஆண்டு மின்னணு துறை மாணவி பேபி ஷாலினி ஈட்டி எறிதல் போட்டியில் 2வது இடத்தையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குனர் ஜோஸ் சுந்தரையும் கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன், முதல்வர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory