» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி.சான்றிதழ் தேர்வு!
வியாழன் 9, பிப்ரவரி 2023 4:29:53 PM (IST)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி மாண வர்களுக்கான 'ஏ' சான்றி தழ் தேர்வு நடைபெற்றது.
பள்ளிகளில் என்.சி.சி அமைப்பில் உள்ள மாணவ மாணவிகளுக்கு ஆண்டு தோறும்'ஏ'சான்றிதழ் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றிபெறும் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை மற்றும் இட ஒதுக்கீடு அளிக் கப்படுகிறது.
தமிழ்நாடு 9வது சிக்னல் கம்பெனி என்.சி.சி சார்பில் கமாண்டிங் அதிகாரிலெப்டி னன்ட் கர்னல் சின்ஹா உத் தரவின்பேரில் நடைபெற்ற தேர்வில் நாசரேத் மர்கா ஷிஸ் மேல்நிலைப் பள்ளி, பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆழ்வார்திரு நகரி இந்து மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றிலிருந்து 120 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
கவில்தார் தேசிங்கு ராஜா மற்றும் நவுசத் அலி ஆகியோர் தேர்வை நடத்தினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுதாகர் தலைமையில் பள்ளி தலை மையாசிரியர் ஜெபகரன் பிரேம்குமார் மற்றும் என்.சி.சி ஆசிரியர் சுஜித் ஆகியோர் செய்திருந்தனர்.