» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்!
வியாழன் 9, பிப்ரவரி 2023 4:26:22 PM (IST)
நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத் மர்காஷி யஸ் நகரில் இயங்கிவரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக்கல் லூரியில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அசோக் லைலண்ட் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை தா ங்கி தலைமையுரை நிகழ்த் தினார். இயந்திரவியல் துறைத் தலைவர் பிரபாகர் வேதசிரோன்மணி ஆரம்ப ஜெபம் செய்தார்.
அசோக் லைலண்ட் நிறுவன பொறி யாளர் டேவிட் பணி பற்றிய விளக்கவுரையாற்றி வளா கத் தேர்வை நடத்தினார். இதில் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சி.எஸ்.ஐ. பாலி டெக்னிக் கல்லூரி, மற்றும் நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி ஆகிய கல்லூரியைச் சார்ந்த 97; மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமானர் பணி ஆணை பெற்றுக் கொண்டனர்;. இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மற்றும் தூத்துக்குடி-நாசரேத் திரு மண்டல லே செயலரும், கல் லூரி தாளாளருமான நீகர் பிரின்ஸ்கிப்ட்சன் தலைமை யில், முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார் தனபால் கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அலுவலர் ஜான் வெஸ்ஸி மற்றும் ஆசிரியர்கள் அலுவ லர்கள் செய்து இருந்தனர்.