» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இரத்த தான முகாம்
வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:30:59 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டத்தின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டுநலப் பணித்திட்டத்தின் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து இரத்த வங்கி மருத்துவ அதிகாரி ஆர்.சாந்தி, தலைமையில் மருத்துவ குழுவினர் வந்திருந்தனர்.
இந்த முகாமில் 25 ஆண்களும் 5 பெண்களும் மொத்தம் 30 பேர்கள் இரத்த தானம் வழங்கினர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை இக்கல்லூரியின் முதல்வர் ப.அகிலன் உத்தரவின்பேரில் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மு.முருகானந்தம், உதவிப்பேராசிரியர் மற்றும் மாணவர் செயலாளர் செல்வன் சந்தோஸ்குமார் செய்து இருந்தனர். இம்முகாமில் இரத்த தானம் வழங்கியவர்களை இக்கல்லூரியின் முதல்வர் வெகுவாக பாராட்டினார். இதில் விரிவாக்கம், பொருளியில் மற்றும் புள்ளியில் துறையின் தலைவர் முனைவர் ந.வ.சுஜாத்குமார் கலந்து கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


