» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
விடுப்பில் இருந்தும் குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட வேம்பார் பள்ளி ஆசிரியை.
வியாழன் 26, ஜனவரி 2023 5:58:30 PM (IST)

வேம்பார் வாலசமுத்திரபுரம் துவக்கப்பள்ளியில் குடியரசு தின விழாவில் விடுப்பில் உள்ள ஆசிரியையும் கலந்துகொண்டு நாட்டுப்பற்றை நிரூபித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள வேம்பார் வால சமுத்திரபுரம் இந்து நாடார் உறவின்முறை பள்ளியில் 74 வது குடியரசு தினவிழா நடந்தது. ஆசிரியை தமிழ்செல்வி வரவேற்றார். கிராம தலைவர் சேர்மன் கொடியேற்றினார். பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான பால் சாமி சிறப்புரையாற்றினார். மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
கலைநிகழ்ச்சி மற்றும் போட்டிகளை ஆசிரியைகள் ராஜலட்சுமி சிவகாமி ஆகியோர் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினர்.விழாவின் முத்தாய்ப்பாக விடுப்பில் இருந்து வரும் ஆசிரியை சரவணச்செல்வி குடியரசு விழாவில் கலந்து கொண்டு தனது நாட்டுப்பற்றை நிரூபித்து சக ஆசிரியைகள் மாணவர்கள் பொதுமக்களின் பாராட்டை பெற்றார். நடந்த குடியரசு தின நிகழ்வின் நிறைவில் தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செய்துங்கநல்லூர் குழந்தை ஏசு நர்சரி பள்ளி ஆண்டு விழா
வெள்ளி 31, மார்ச் 2023 3:14:08 PM (IST)

மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டி: 4 மாணவர்கள் தேர்வு
ஞாயிறு 26, மார்ச் 2023 8:33:59 AM (IST)

சாகுபுரம் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா!
சனி 25, மார்ச் 2023 12:15:10 PM (IST)

தூத்துக்குடி கல்லூரி மாணவிகளுக்கு கல்விஉதவிதொகை
வெள்ளி 24, மார்ச் 2023 11:56:56 AM (IST)

மாநில அளவிலான பொறியியல் திட்ட கண்காட்சி: நாசரேத் சி.எஸ்.ஐ.கல்லூரி மாணவர்கள் சாதனை!!
வியாழன் 23, மார்ச் 2023 3:39:08 PM (IST)

காயல்பட்டினம் பாத்திமா பள்ளியில் ஆண்டு விழா
வியாழன் 23, மார்ச் 2023 11:04:22 AM (IST)
