» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

திறன் போட்டிகளில் நாகலாபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை

புதன் 25, ஜனவரி 2023 11:46:38 AM (IST)



திறன் போட்டிகளில் சாதனை படைத்த  நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் ஒளரங்கபாத்தில் இயங்கும் "அனைத்திந்திய குடிமக்கள் வளர்ச்சி மையம்" நடத்திய மாணவர் திறன் போட்டிகளில் நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த 52 மாணவ-மாணவியர்கள் பங்கு பெற்று சாதனை படைத்தனர். சாதனை செய்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் பள்ளி நிர்வாக குழு தலைவர் தங்கமணி தலைமையில் நடந்தது.  தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி வரவேற்றார். 

முதுகலை ஆசிரியர் இரவிச்சந்திரன், ஆசிரியைகள் கவிதா மற்றும் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாதனை படைத்த 8-ம் வகுப்பு மாணவி தாரணி, சிறந்த  கையெழுத்துக்கான "கலா ஸ்ரீ" மெடலையும், 9-ம் வகுப்பு மாணவி  நிகிர்தா சிறந்த ஓவியத்திற்கான "கலா ரத்னா" மெடலையும் பெற்ற மாணவியர்கள் பாராட்டு பெற்றனர். தொடர்ந்து பங்கு பெற்ற 52 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பெற்றனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

SURESHKUMARJan 25, 2023 - 12:47:17 PM | Posted IP 162.1*****

Congratulations!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory