» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 20, ஜனவரி 2023 3:15:33 PM (IST)
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியை கணக்கரத்தின மணி தலைமை தாங்கினார். மாப்பிள்ளை யூரனி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட புகையிலை தடுப்பு அதிகாரி ரேணுகா, டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில், சமூகப் பணியாளர் ரோசாரி பாத்திமா, பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஸ்டாலின், பாரதிராஜா, அருண்குமார், சுரேஷ் பள்ளி செயலாளர், நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது, மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியை செல்வ முத்துலட்சுமி நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்சிசி ஆசிரியர் ஆல்பன் செய்திருந்தார்.