» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

வெள்ளி 20, ஜனவரி 2023 3:15:33 PM (IST)



தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.             

தலைமை ஆசிரியை கணக்கரத்தின மணி தலைமை தாங்கினார். மாப்பிள்ளை யூரனி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட புகையிலை தடுப்பு அதிகாரி ரேணுகா, டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

இதில், சமூகப் பணியாளர் ரோசாரி பாத்திமா, பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஸ்டாலின், பாரதிராஜா, அருண்குமார், சுரேஷ் பள்ளி செயலாளர், நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது, மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியை செல்வ முத்துலட்சுமி  நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்சிசி ஆசிரியர் ஆல்பன் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory