» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சிங்கிலிபட்டி அரசு நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
சனி 14, ஜனவரி 2023 5:04:49 PM (IST)
சிங்கிலிபட்டி அரசு நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றியம், சிங்கிலிபட்டி அரசு நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் கோலப் போட்டி பானை உடைத்தல், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியர், விஜயராணி, ஆசிரியர்கள் ப்ரியா, கனகராஜ், புனிதா, லீலா, சீதாலெட்சுமி, சத்தணவு பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.