» சினிமா » செய்திகள்
ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள் வெளியீடு: சைபர் கிரைம் போலீஸில் நடிகை புகார்
சனி 31, டிசம்பர் 2022 10:42:57 AM (IST)
சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள் வெளியீட்ட நவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸில் நடிகை பிரவீனா புகார் அளித்துள்ளார்.
மலையாள நடிகையான பிரவீனா, தமிழில் ‘வெற்றிவேல்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கோமாளி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ‘ராஜா- ராணி’, ‘பிரியமானவள்’ உட்பட டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர், தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக அளித்தப் புகாரை அடுத்து கடந்த வருடம் பாக்யராஜ் என்ற மாணவரை, போலீஸார் டெல்லியில் கைது செய்தனர். பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் பிரவீனா மகளும் சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுபற்றி பிரவீனா கூறும்போது, "நான் போலீஸில் புகார் கொடுத்ததை அடுத்து பழிவாங்கும் நோக்கத்துடன் அந்த நபர் செயல்பட்டு வருகிறார். என் மகள், அம்மா, சகோதரி, நண்பர்கள் ஆகியோரின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்டு வருகிறார். இவ்வளவு வக்ரமாகவும் மனநோயாளியாகவும் யாராவது இருக்க முடியுமா?” என்று கேட்டுள்ள நடிகை பிரவீனா, தனது மகளும் சைபர் கிரைமில் இதுபற்றி புகார் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

