» சினிமா » செய்திகள்

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!

வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)



அவதார் 3 பாகத்தை இந்தியாவில் புரோமோஷன் செய்யும் வகையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு ஜேம்ஸ் கேமரூன் சிறப்பு வீடியோ நேர்காணல் கொடுத்துள்ளார். 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் வெளியானது.

தற்போது அதன் 3-ம் பாகம் உருவாகி உள்ளது. இதற்கு ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இப்படம் நாளை உலக அளவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், அவதார் 3 பாகத்தை இந்தியாவில் புரோமோஷன் செய்யும் வகையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு ஜேம்ஸ் கேமரூன் சிறப்பு வீடியோ நேர்காணல் கொடுத்துள்ளார். அதில், அவதார் படத்தை பற்றியும் அவர் பேசியுள்ளார். குறிப்பாக ராஜமவுலியின் அடுத்த படமான 'வாரணாசி' படம் குறித்து கேட்டறிந்த ஜேம்ஸ் கேமரூன், அப்படத்தில் புலிகளை வைத்து ஏதேனும் காட்சிகள் படமாக்கப்பட்டால் என்னை கூப்பிடுங்கள் நான் வருகிறேன் என்று ஜாலியாக தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory