» சினிமா » செய்திகள்

நடிகை துனிசா சர்மா தற்கொலை வழக்கில் காதலன் கைது - 16 பேரிடம் வாக்குமூலம் பதிவு

புதன் 28, டிசம்பர் 2022 4:13:05 PM (IST)

டி.வி நடிகை துனிசா சர்மா தற்கொலை தொடர்பாக போலீசார் 16 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

டி.வி. நடிகை துனிஷா சர்மா. இவர் வசாய் அருகே நைகாவ் பகுதியில் உள்ள படப்பிடிப்பு தளத்தின் குளியல் அறையில் கடந்த 24-ந்தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வாலிவ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் சக நடிகரும், காதலருமான ஷீசன் கான் என்பவர் தான் அவரது தற்கொலைக்கு காரணம் என தெரியவந்தது.  இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் டி.வி நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்ட இடத்தில் போலீசார் சென்று தடயவியல் பரிசோதனை நடத்தினர். அங்கு நடிகை பயன்படுத்திய பல பொருட்களை கைப்பற்றினர். அவற்றை கலினா ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தவிர சம்பவத்தன்று படப்பிடிப்பில் இருந்த 16 பேரின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர். துனிஷா சர்மாவுடன், கைது செய்யப்பட்ட நடிகர் 3 மாதமாக உறவில் இருந்ததாக தெரியவருகிறது. இதற்கிடையே நேற்று டி.வி நடிகை துனிஷா சர்மாவின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு ஆம்புலன்சு மூலம் மிராரோடு சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. துனிஷா சர்மாவின் உடலுக்கு அவரது தந்தை தீ மூட்டினார். இந்த சடங்கில் உறவினர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory