» சினிமா » செய்திகள்
அமிதாப் பச்சனின் பெயர், குரலை அனுமதியின்றி பயன்படுத்த தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 25, நவம்பர் 2022 3:17:09 PM (IST)
நடிகர் அமிதாப் அமிதாப் பச்சன் பெயர், போட்டோ, குரலை அனுமதியின்றி பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் அமிதாப் பச்சன், தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடைவிதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நவீன் சாவ்லா இன்று விசாரித்தார். அப்போது அமிதாப் பச்சன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அமிதாப் பச்சன் பெயரில் போலியான நிகழ்ச்சியில் லாட்டரி மோசடி நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அமிதாப் பச்சனின் புகைப்படங்களை பயன்படுத்தி துணி, சுவரொட்டிகள் தயாரிக்கின்றனர். எனவே அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படங்கள், குரல் ஆகியவற்றை முன் அனுமதியின்றி வணிக நோக்கத்துடன் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமிதாப் பச்சன் பெயர், போட்டோ, குரலை முன் அனுமதியின்ற பிறர் பயன்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் - லோகேஷ் கூட்டணி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:42:07 AM (IST)

பழம்பெரும் சன்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம் மறைவு : ரஜினிகாந்த் இரங்கல்
வெள்ளி 27, ஜனவரி 2023 10:56:22 AM (IST)

எம்.ஜி.ஆர் படத்தை நெஞ்சில் டாட்டூ குத்திய விஷால்
புதன் 25, ஜனவரி 2023 11:11:33 AM (IST)

ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் நாட்டு நாட்டு பாடல்..!
புதன் 25, ஜனவரி 2023 10:59:12 AM (IST)

ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் தேதியில் மாற்றம்?
செவ்வாய் 24, ஜனவரி 2023 12:36:29 PM (IST)

மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்!
திங்கள் 23, ஜனவரி 2023 12:05:59 PM (IST)
