» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு

புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)



கங்கைகொண்டான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அரசுத் துறை சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பல்வேறு புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கங்கைகொண்டான் பகுதியில் உள்ள இலங்கைவாழ் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் இன்று நேரிடை ஆய்வு மேற்கொண்டார்.

இப்பகுதியில் வசிக்கும் 657 இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகள் மற்றும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகளின் கட்டுமானத் தரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அங்குள்ள மக்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். தொடர்ந்து, முகாம் வளாகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்குச் சென்ற அவர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், கல்வி கற்பிக்கும் முறைகள் மற்றும் குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம், எடைப் பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன் குழந்தைகளுடனும் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் துறையூர் பகுதியில் செயல்பட்டு வரும் சமூக நீதி மாணவர் விடுதியின் செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை விபரங்கள் மற்றும் கல்வித் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் விடுதியின் அடிப்படைத் தூய்மை வசதிகள் குறித்தும் அவர் விரிவாகப் பார்வையிட்டார்.

நிறைவாக, கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், உள்நோயாளி படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகளின் கையிருப்பு நிலவரம் மற்றும் தினசரிப் பராமரிப்புப் பதிவேடுகள் ஆகியவற்றைத் தணிக்கை செய்தார். மேலும், சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவமனைச் சேவைகள் முறையாகக் கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது திருநெல்வேலி வட்டாட்சியர் மாரிமுத்துகுமார், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் தனி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory