» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தல்!

வெள்ளி 25, அக்டோபர் 2024 4:05:38 PM (IST)

அணைகளின் கொள்ளளவை பொறுத்து உபரிநீர் திறந்துவிடப்படும் என்பதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் திருவட்டார் வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை I, சிற்றாறு அணை II ஆகிய அணைகளின் கொள்ளளவை விட நீர் அதிகமாகும் போது  மேற்குறிப்பிட்ட அணைகளிலிருந்து  உபரிநீர் திறந்து விடப்படும். 

எனவே தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்படுவதோடு, சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் ஆற்றுப்படுகைளில் குளிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory